logo
விளை நிலங்கள் வீட்டு மனையாக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடிஇழப்பு:   எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

விளை நிலங்கள் வீட்டு மனையாக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடிஇழப்பு: எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

30/Nov/2020 11:06:42

ஈரோடு:  இது குறித்து  பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்  அளித்த பேட்டி: பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அரசின் அனுமதி பெறாமல் பல நூறு ஏக்கர் நிலங்கள் விளை நிலங்கள் என்ற போர்வையில் வீட்டு மனைகள் ஆக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுகவில் இல்லாதவர்கள் அதிமுக  கரை வேட்டியை கட்டிக்கொண்டு ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு முறையான விசாரணை செய்து முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது தொடர்பாக முதல்வரிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.


Top