logo
தேர்தல் ஆணையம் செயலிழந்து விட்டது: மார்க்சிஸ்ட்கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் செயலிழந்து விட்டது: மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

04/Apr/2021 04:12:47

புதுக்கோட்டை, ஏப்: தேர்தல் ஆணையம் செயலிழந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.

 புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறிய தாவது: அதிமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டுகொள்ளாமல் செயலிழந்து விட்ட தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சியினர் வீடுகளை சோதனையிட்டு பிரச்னையை திசை திருப்பும் வேலையை செய்து வருகிறது.

தமிழகத்தை 10 ஆண்டுகளாக ஆட்சிசெய்த அதிமுகவின் அராஜக ஆட்சி இன்னும் சில நாள்களில்  முடிவுக்கு வரவுள்ளது. தமிழனின் மொழி உரிமையை, இட ஒதுக்கீட்டு உரிமை யை, மனித உரிமையை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு உடந்தை யாக எடப்படி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு இருந்து வருகிறது. 

இழந்த உரிமையை மீட்டெடுக்க, விவசாயத்தை, தொழிலைப் பாதுகாக்க, வளப்படுத்த திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என தமிழக மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதிமுகவினர் எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் அவர்களால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, பிபிஐ போன்ற தன்னாட்சி பெற்ற எந்த அமைப்பு களையும் மோடி அரசு சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை. இதில் தேர்தல் ஆணையமும் அடங்கும். அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக  கொள்ளையடித்து வைத்திருக் கும்  பணத்தை தேர்தலுக்காக தண்ணீராக செலவழிக்கின்றனர்.

வாக்குகளை ரூ.2 ஆயிரம், 5 ஆயிரம்  என்று  விலைக்கு  வாங்குகின்றனர். அவர்களை யெல்லாம் கண்டுகொள்ளாமல் தப்பவிடும் தேர்தல் ஆணையம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீடு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வீடுகளை சோதனையிட்டு பிரச்னையை திசை திருப்பி வருகிறது. அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தால்கூட அவர்களை தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை. பாரபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லை. இங்குள்ள இளைஞர்கள்  வேலை தேடி வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் எம்.சின்னத்துரை வெற்றி பெற்றால் கந்தர்வகோட்டை தொகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவார்.

கடந்த 7 ஆண்டுகால மோடி தலைமையிலான பாஜக அரசில் எந்தவித தொழில்சாலையும் கொண்டுவரப்படவில். வேலை வாய்ப்புகளும் தரப்படவில்லை. மாறக  வேலைவாய்ப்பை இல்லாமல் செய்யும் வகையில் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஒரு இடத்தைக்கூட தரமாட்டார்கள் என்றார் பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன் உடனிருந்தார்.


Top