01/Jan/2021 10:39:53
ஈரோடு, டிச: ஈரோடு ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே பொது மேலாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் பார்வையிட்டார். நடைமேடைகள், ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் பகுதி அங்கு நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெயில்வே திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ரெயில்வே மருத்துவமனைக்கு சென்ற சீனிவாசன் அங்கு சிகிச்சை பெறுபவர்கள் இடம் குறைகளை கேட்டறிந்தார். டாக்டர்களிடம் சிகிச்சை முறை குறித்தும் நாள் ஒன்றுக்கு எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் பணிமனைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வியாழக்கிழமை நடந்த இந்த ஆய்வின்போது ரெயில்வே உயரதிகாரிகள் ரெயில்வே போலீசார் உடனிருந்தனர்