02/Apr/2021 03:10:48
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.திமுகவின் தேர்தல் பிரசாரத்தை சபரீசன் கவனித்து வருவதாக கூறப்படும் நிலையில் வருமான வரி சோதனை நடந்து வருவது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..