18/Mar/2021 09:22:05
ஈரோடு மார்ச்: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளின் முழு அடைப்பு போராட்டத்தால் சுமார் ரூ. 50 கோடி வர்த்தகம் பாதிக்கபட்டது.
ஈரோட்டில் பிரதான தொழிலாக ஜவுளி தொழில் விளங்கி வருகிறது. இதற்கு அடிப்படை தேவையான நூல் விலை கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து 30 முதல் 40 சதவீதம் உயர்ந்தது வருவதால் , ஜவுளி தொழில் மிகவும் பாதிக்கப்பட் டுள்ளது. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் பங்கேற்றுள்ளதால் ஒரு நாள் மட்டும் ரூ.50 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படதாக வணிகர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே கடையடைப்பு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழக முதல்வர் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதால் சுமுக முடிவு ஏற்படச்செய்கிறோம் என கூறியதால் கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் தங்களது கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாததால் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ள ஜவுளித் தொழிலை காப்பாற்ற இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.