logo
 ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: தி.மு.க., வேட்பாளர் முத்துசாமி வாக்குறுதி

ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: தி.மு.க., வேட்பாளர் முத்துசாமி வாக்குறுதி

29/Mar/2021 07:37:39

 ஈரோடு, மார்ச்: ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் முத்துசாமி வாக்குறுதி அளித்தார்.

  ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி, ஆளிச்சாம்பாளையம், கணக்கங்காடு, அருந்ததியர் காலனி, தயிர்பாளையம், வேட்டைபெரியாம் பாளையம், சாமிகவுண்டன்பாளையம், மேற்குபுதுார், வசந்தம் கார்டன் காலனி, சி.எஸ்.ஐ., தெரு, நசியனுார், சிந்தன்குட்டை பகுதியில் உதய சூரியன் சின்னத்தில்  வாக்கு சேகரித்தார்.

அப்பகுதியில், வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது:

ஈரோடு மேற்கு தொகுதி மேம்பாட்டுக்காக, அ.தி.மு.க.அரசு எந்த பணியும் செய்யவில்லை. குடிநீர், கழிவு நீர் சாக்கடை, தெரு விளக்குகள், தார் சாலை, பொது கழிப்பறை, புதிய பேருந்து  வழித்தடம் என எதையும் ஏற்படுத்தவில்லை.

மேற்கு தொகுதி, சித்தோடு முதல் தயிர்பாளையம் வரை  அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க, சாலை விரிவாக்கம், பாதுகாப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். விபத்தை தடுக்க, நவீன கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு, 30 சதவீதத்தில் இருந்து கூடுதலாக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை, 1,500 ரூபாயாகவும், மகளிருக்கு பேறுகால உதவித்தொகை, 24,000 ரூபாய், 100 நாள் வேலை திட்டம், 150 அல்லது, 200 நாளாக மாற்றி, கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபற்றி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக நிறைவேற்றுவேன். இவற்றை நிறைவேற்ற எனக்குஉதயசூரியன் சின்னத்தில்  வாக்களித்து  வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.

பின்னர், பழையூர் தெற்கு தெரு, கருப்பண்ண கவுண்டனர் வீதி, லட்சுமி நகர், பெருமாபாளையம், மூலப்பாளையம், விருமாண்டம்பாளையம், கரை எல்லப்பாளையம் அய்யம்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் வாக்கு  சேகரித்தார்.

Top