logo
ஈரோடு கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்:  திமுக வேட்பாளர் சு.முத்துசாமி  வாக்குறுதி

ஈரோடு கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வாக்குறுதி

01/Apr/2021 09:51:34

ஈரோடு, ஏப்ரல் :ஈரோடு கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்:  திமுக வேட்பாளர் சு.முத்துசாமி  வாக்குறுதி அளித்தார்.  

ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி, ஈரோடு ரங்கம்பாளையம், அண்ணா நகர், கே.கே.நகர்,சேனாபதிபாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், ரயில் நகர் போன்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 

அங்கு பொதுமக்களிடம் வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது:ஈரோடு மாநகராட்சி பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், நிலுவையில் உள்ள புதை சாக்கடை பணிகளை முடிப்பது, சாலை செப்பனிடுதல், சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் வடிகால் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் உடன் மேற்கொள்ளப்படும்.

ஈரோட்டில் இருந்து சென்னிமலை, வெள்ளோடு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. ஆனால், அதிக வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுவதால், கே.கே.நகரில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், வாகனங்கள் விபத்துக்குள்ளானாலும் மக்கள் சிரமப்படுகின் றனர்.  எனவே, இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

மக்கள் தெரிவிக்கும் குறைகள், புகார்கள் மீது தாமதமின்றி தீர்வு காணப்படும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக ஆட்சி அமைத்தவுடன்  இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 


                                                                               


Top