logo
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

21/Mar/2021 07:43:44

ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சுமூகமாகவும், அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள்  அனைத்திலும் முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பால் சிறப்பாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றன. அதேபோல் இந்த 2021  ஆண்டு தேர்தலும்  அமைதியான முறையிலும், பாதுகாப்பாகவும் கிறது நடைபெற தங்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும்.  மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.எனவே விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 0424 - 2266010 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Top