20/Jun/2021 04:44:05
ஈரோடு, ஜூன்:ஈரோட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.97-க்கு விற்பனை செய்யப்படுவதால் வாகனஓட்டிகள் அதிருப்தியடைந்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த
ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தையடுத்து
சில மாதங்கள் வரை பெட்ரோல் ,டீசல்
விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து
மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100
தாண்டியது.
தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். ஈரோடு மாவட்டத்திலும் தினமும் பெட்ரோல் ,டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.71 - க்கு விற்பனையானது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை 26 பைசா அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.97-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்