logo
ஈரோடுக்கு ஜன-24 -இல்  ராகுல்காந்தி வருகை: காங்கிரஸார் ஆலோசனை

ஈரோடுக்கு ஜன-24 -இல் ராகுல்காந்தி வருகை: காங்கிரஸார் ஆலோசனை

21/Jan/2021 11:29:27


 ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தருவது தொடர்பான  ஆலோசனை கூட்ட வியாழக்கிழமை நடைபெற்றது.

 ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அம்புலி, விஜயபாஸ்கர், திருச்செல்வம், ஜாபர்சாதிக், மகிளா காங்., தலைவர் புவனேஸ்வரி, அர்ஷத், கே.என்.பாட்ஷா உள்ளிட்டோர்  பேசினர்.

வரும், 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும் ராகுல்காந்தி 10.30 மணிக்கு ஊத்துக்குளியிலும், 11.15 மணிக்கு பெருந்துறையிலும் பேசுகிறார்.

மதியம் 12.00 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பேசுகிறார். மதியம் 1.15 மணிக்கு ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நெசவாளர்களுடன் பேசுகிறார்.

 மதியம் 3.45 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேசுகிறார். மாலை 4.45 மணிக்கு தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் ராகுல்காந்தி பேசும் நிகழ்ச்சியில், 20,000 பேருக்கு மேல்பட்ட தொண்டர்கள், பொதுமக்களை பங்கேற்கச்செய்ய   திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Top