logo
நுால் விலையேற்றத்துக்கு தீர்வு காணப்படும்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

நுால் விலையேற்றத்துக்கு தீர்வு காணப்படும்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

19/Mar/2021 09:16:51

ஈரோடு, மார்ச்:நுால் விலையேற்றத்துக்கு தீர்வு காணப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உறுதியளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி சார்பில்  போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா. ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் வீதி வீதியாக சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார்.

வீரப்பன்சத்திரம் பகுதியில் பொதுமக்கள், விசைத்தறியாளர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

வீரப்பன்சத்திரம் பகுதியில் அதிக அளவில் விசைத்தறி கூடங்கள் செயல்படுகிறது. விசைத்தறியாளர்கள், நுால் விலை உயர்வால் கடுமையாக பாதித்துள்ளனர். குறிப்பாக, ரயான் நுால் விலை உயர்வால், கடுமையாக பாதித்துள்ளனர். குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறை நுால் விலை உயர்த்தக்கோரி பல போராட்டம் நடத்தியும், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், நுால் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணப்படும்.

இலவச வேட்டி சேலைகள், பள்ளி சீருடைகள் முழுமையாக தமிழகத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய வலியுறுத்தப்படும். இப்பகுதி சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடற்ற ஏழைகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தரப்படும். முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க உதவுவோம் எனவே, எனக்கு கை சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள் என்றார். . இதில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன் உள்பட திரளானோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Top