logo
சட்டமன்ற தொகுதிகளுக்கான  வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி :  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

18/Mar/2021 06:46:07

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு  நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதுகுறித்து  மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அந்தந்த  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில்   பின்வரும் நாட்கள் மற்றும் இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.   அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  மையத்தில் நடைபெறும்  பயிற்சியில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.


அதன்படி  முதல் பயிற்சி வகுப்பு   18.3.2021 - இன்றும் , இரண்டாம் பயிற்சி வகுப்பு 26.3.2021 அன்றும், இரண்டாம் மறு பயிற்சி வகுப்பு  3.4.2021 அன்றும், மூன்றாம் பயிற்சி வகுப்பு 5.4.2021 அன்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.


இப்பயிற்சி வகுப்புகள் 178-கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலா;களுக்கு  புதுப்பட்டி அரசு  பாலிடெக்னிக்  கல்லூரியிலும் , 179-விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆரியூர் குமரன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு  புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும்  நடைபெற உள்ளது.

181-திருமயம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அரசம்பட்டி  சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும் , 182-ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு  ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 183-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு  அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

Top