logo
சத்தியமங்கலம் அடுத்ததாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை  நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்ததாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

02/Feb/2021 08:38:55

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான மான்கள், புலிகள், சிறுத்தைகள், யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி மற்றும் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு விவசாய நிலத்தில் புகுந்து நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை  இரவு 9 மணியளவில் தாளவாடியை சேர்ந்த 2 பேர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு  காரில் சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் கும்டாபுரம் என்ற கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக  சிறுத்தை ஒன்று  சாலையில்  நடந்து சென்றுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாகனத்தில் சென்றவர்கள்  சிறுத்தையின் நடமாட்டத்தை தங்களது செல்லிடப்பேசியில் படம் பிடித்தனர். நீண்ட தொலைவு  சாலையில் நடந்து சென்ற அந்த சிறுத்தை   காட்டுக்குள் சென்றது.

 கிராம வனச்சாலையில்  சிறுத்தை  நடமாடுவதால் மலைகிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Top