logo
ஈரோட்டில் வாகன காப்பீட்டு ஊழியரை பணம் கேட்டு தாக்கிய பெண் உட்பட 5 பேர் கைது

ஈரோட்டில் வாகன காப்பீட்டு ஊழியரை பணம் கேட்டு தாக்கிய பெண் உட்பட 5 பேர் கைது

24/Feb/2021 10:34:22

ஈரோடு, பிப்:ஈரோட்டில் வாகன காப்பீட்டு ஊழியரை பணம் கேட்டு தாக்கிய பெண் உழ்பட 5 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

 ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், காந்தி நகர் பகுதியை சிறந்தவர் கிருஷ்ணா பிரசாந்த் ( 29). வாகன விபத்து சேத கணக்கிடும் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.இவரது செல்போனுக்கு ஈரோடு கே.கே. நகரை  சேர்ந்த தேன்மொழி (33) என்பவர் போன் செய்து எனது தோழி வாகனம் விபத்தில் சேதமடைந்துள்ளது. நீங்கள் நேரில் வந்து   சேத மதிப்பீடு விவரங்களை பார்த்து மதிப்பிட  வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 இதையடுத்து கிருஷ்ண பிரசாந்த் தேன்மொழி வீட்டுக்கு சென்றுள்ளார். இருவருக்குமிடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்  தேன்மொழியின் கணவர் கவுதம் (31) அவரது தோழி ஈஸ்வரி (35), கவுதம், கறி கடை பணியாளர்  விவேக் (24) லோகேஷ் (21) ஆகிய 5 பேரும் ஒன்றாக சேர்ந்து ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று கிருஷ்ண பிரசாந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 இதையடுத்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் கிருஷ்ணபிரசாந்த்  அளித்த  புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணா பிரசாந்தை தாக்கியதாக தேன்மொழி, கவுதம் உட்பட 5 பேரை கைது செய்தனர்

Top