logo
ஆலங்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 8 பேர் காயம்.

ஆலங்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 8 பேர் காயம்.

22/Feb/2021 06:39:58

புதுக்கோட்ட: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் மாடுபிடிவீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

 ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 11 காளைகள் கலந்துகொண்டன. மாடுபிடி வீரர்கள் 9 பேர் ஒரு குழுவாக அனுமதிக்கப்பட்டனர். 1 குழுவுக்கு அரை மணி நேரம் என போட்டியில் 11 குழுக்களாக வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

இதில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

 

Top