logo
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) வே.பாலகிருஷ்ணனுக்கு மதிமுக நிர்வாகிகள்  வாழ்த்து

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) வே.பாலகிருஷ்ணனுக்கு மதிமுக நிர்வாகிகள் வாழ்த்து

22/Jun/2021 07:19:09

திருச்சி, ஜூன்: திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் (.ஜி) வே.பாலகிருஷ்ணனுக்கு மதிமுக நிர்வாகிகள்  நேரில் சந்தித்து  வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக செயலர் மணவை தமிழ்மாணிக்கம் கூறியதாவது:

திருச்சி மத்திய மண்டல காவல் துணைத் தலைவராக முன்பு பணியாற்றிய , பெருமைக்குரிய சகோதரர் வே.பாலகிருஷ்ணன் அவர்கள், தற்சமயம் திருச்சி மத்திய மண்டலத்திற்கு காவல் துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

ஏற்கெனவே, அவர் டிஐஜி-யாக இருந்தபோது, தொலைபேசி வழியாக ஒரு புகார் தெரிவித்தால், நேரடியாக தனி குழு அமைத்து நடவடிக்கை எடுப்பார். அதேபோல, அவர் எந்த ஊரில் பொறுப்பில் இருந்தாலும், எளிய மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உதவுவதில் முன்னோடியாகத் திகழ்பவர்.

அதேநேரத்தில், பொதுமக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் புகார்களை காது கொடுத்துக் கேட்பார்.காவல் துறை உயர் அதிகாரி என காட்டிக் கொள்ளாமல், மிக எளிமையாகப் பழகுவார். அடிக்கடி விழிப்புணர்வு காணொலிகளை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்வார்.

நல்ல தமிழ் மொழி சிந்தனையாளர். அவரை இன்று மறுமலர்ச்சி திமுக சார்பில் சந்தித்து வாழ்த்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோம்.உடனடியாக அனுமதி தந்து சந்தித்தார். அவருக்கு திருக்குறள் நூல் தந்து பயனாடை அணிவித்தோம்.

திருக்குறள் நூல் குறித்தும், நூலாசிரியர்களின் உரை குறித்தும் பகிர்ந்து கொண்டார். கடுமையான பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 30 நிமிடம் நம்முடன் கலந்துரையாடினார்.

ஒரு காவல் துறை உயர் அலுவலர் என்பதைக் காட்டிலும், ஒரு ஆகச்சிறந்த மானுடப் பற்றாளர் என்பதால் எங்கள் இயக்கத்தின் சார்பிலும், தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும், அவரை வாழ்த்தி விடைபெற்றோம். திருச்சி மத்திய காவல் மண்டலத்தில், நமக்குக் கிடைத்த நல் மனிதர் என்னும் பெருமிதத்துடன் விடை பெற்றோம்.

இந்த நிகழ்வில், திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, துவாக்குடி நகரச் செயலாளர் மோகன் பெரியகருப்பன், பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் தம்பி  நா.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Top