logo
பெட்ரோல் விவை  30 காசு உயர்ந்து லிட்டர் ரூ.92.46 -க்கு   ஈரோட்டில் விற்பனை:மக்கள் வேதனை

பெட்ரோல் விவை 30 காசு உயர்ந்து லிட்டர் ரூ.92.46 -க்கு ஈரோட்டில் விற்பனை:மக்கள் வேதனை

18/Feb/2021 06:17:47

ஈரோடு, பிப்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 


கடந்த 8-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறும் முகத்திலேயே இருந்து வருகிறது.இன்றைய சூழ்நிலையில் இருசக்கர வாகனங்கள் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் ,விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி ஆழ்ந்துள்ளனர். ஈரோட்டிலும் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று ஒரு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.16 காசுக்கு விற்கப்பட்டது. இன்று 30 காசுகள் உயர்ந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு  ரூ.92.46 காசுக்கு விற்கப்படுகிறது.இதைப்போல் டீசல் நேற்று லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.51 விற்கப்பட்டது. இன்று லிட்டருக்கு 30 காசு உயர்ந்து ரூ.85.81 - க்கு விற்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் தாண்டினால் வியப்பு எதுவுமில்லை.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் சிறு, குறு வியாபாரிகளிடம்  அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இதனை முறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது என்றும் கூறினர்.

Top