logo
ஈரோடு மாவட்டத்தில்   107 மையங்களில் நடந்த  கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் நள்ளிரவில் காத்திருந்த மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் நள்ளிரவில் காத்திருந்த மக்கள்

26/Jun/2021 08:01:27

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்   107 மையங்களில் நடந்த  கொரோனா தடுப்பூசி போடும் முகாம்களில்  நள்ளிரவில் இருந்து வரிசையில் காத்திருந்து பொதுமக்கள்  ஊசி போட்டுக்கொண்டனர்.

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்படும் மையங்களில் இரவிலேயே குவிய தொடங்கி விடுகின்றனர். டோக்கன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சில இடங்களில் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்படுவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முதல் முன்தினம் முதல் தடுப்பூசி சுழற்சி முறையில் போடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் 20 வார்டுகள் வீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அசோகபுரம், கலைமகள் தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சூரியம்பாளையத்தில் அருள்நெறி திருப்பணிமன்றம் தொடக்கப்பள்ளி, திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

கருங்கல்பாளையம்,கமலா நகர், சமயபுரம் கோவில் அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் தெரு , மாநகராட்சி நடுநிலை பள்ளி, பெரியசேமூர் அரசு உயர்நிலைப் பள்ளி, தண்ணீர்பந்தல் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி.

பெரிய வலசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காந்திஜி ரோடு, சாந்தன் கருக்கு 2வது தெரு, ஏஜி சிட்டி பிரைஸ் சென்டர், காந்திஜி ரோடு மாறாத விதி 3, இந்து கல்வி நிலையம், எஸ் கே சி ரோடு பிரப்மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் காலனி சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

பன்னீர்செல்வம் பார்க் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரகுபதி நாயக்கன் பாளையம் பள்ளி, மூலப்பாளையம் திருமண மண்டபம், நூல்மில் சென்டர், ஓம் முருகா கல்யாண மண்டபம், கொல்லம்பாளையம் பள்ளி ஆகிய 20 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி கோவிஷில் டு மட்டும் போடப்பட்டது.

மாநகர் பகுதியில் உள்ள 20 மையத்திலும் 130 டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வழக்கம் போல் நள்ளிரவு முதலே தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.

இதேபோல் பெருந்துறை பவானி அந்தியூர் சத்தியமங்கலம் மொடக்குறிச்சி கோபி உள்பட  மாவட்டம் முழுவதும்  107 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்கள் 12 ஆயிரத்து 250 பேருக்கு செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Top