logo
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது 2 பிரிவுகளில்  வழக்குப்பதிவு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

13/Dec/2020 09:40:57

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது 2 பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பேசியது தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் ஆ. ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் அதிமுக வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிமுக வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் மற்றும் செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.


Top