logo
ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.1.76 கோடியில் தார்ச் சாலை:  பூமி பூஜையுடன் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ.க்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.1.76 கோடியில் தார்ச் சாலை: பூமி பூஜையுடன் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ.க்கள்

18/Feb/2021 05:12:08

ஈரோடு, பிப்: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மூன்றாம் மண்டல பகுதியான எஸ். கே. சி ரோடு, பூசாரி சென்னிமலை வீதி பகுதியில் ரூ.1 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான  பூமி பூஜையை எம்எல்ஏ-க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ். தென்னரசு  ஆகியோர்  கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

இதே போல் வீரப்பம்பாளையம் கரட்டாங்காடு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தையும்   இதைத்தொடர்ந்து வீரப்பம்பாளையம் பள்ளியில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை  தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8  லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்பட்ட புதிய தரைத்தளத்தையும் எம்எல்ஏ-க்கள் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிசாமி பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ், கோவிந்தராஜ்,தங்கமுத்து, ராமசாமி, முருக சேகர், பெரியார் நகர் பகுதி அவைத் தலைவர் மீன் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top