18/Mar/2021 04:52:53
ஈரோடு மார்ச்:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் திமுக துணை பொது செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர் கூறியதாவது: மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .எதிர்த்து பா.ஜ.க போட்டியிடுகிறது. இத்தொகுதியை அதிமுகவினருக்கு ஒதுக்க வில்லையே என்ற வருத்தம் உள்ளது..
மேலும் மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் விவசாயிகள் நிறைந்த பகுதி,தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளை காப்பதுதான் தனது முதல் பணி என்றார்.
வேட்பு மனு தாக்கலின் போது திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் , கதிர்வேல், நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.