logo
 முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை: மே.15-இல்  முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் விநியோகம்: ஆட்சியர் தகவல்

முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை: மே.15-இல் முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் விநியோகம்: ஆட்சியர் தகவல்

10/May/2021 08:18:35

புதுக்கோட்டை, மே:முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகையின் முதல்தவணை ரூ.2 ஆயிரம்  மே.15-இல்  முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்க ளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில்  முதல்வர் அறிவித்த பொது விநியோகத்திட்ட அரிசி பெறும் குடும்ப மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000  வீதம் நிவாரணத் தொகை முதல் தவணையாக மே மாதத்தில் (15.05.2021) அந்தந்த நியாய விலைக் கடைகளில் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட உள்ளது.

கொரோனா நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க தொடா;புடைய  நியாய விலைக் கடைகள் மூலமாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,947 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி கொரோனா நிவாரணத் தொகை  ரூ.2,000  (இரண்டாயிரம் மட்டும்பெறுவதற்கு  நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அறிவிக்கப்பட்டுள்ளதால் 

கொரோனா நிவாரணத் தொகையினை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு நாள் நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன்கள் 10.5.2021 முதல் 12.5.2021 முடிய வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக  ரூ.2,000 மின்னணு குடும்ப அட்டை மூலமாக வழங்கப்படும். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாத இனங்களில்  e-PoS Device மூலம் கொரொனா வைரஸ் நிவாரண உதவி தொகை முதல் தவணை வழங்கப்படும். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத் தாளில் குறிப்பிடப்பட வேண்டும். கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை முதல் தவணையாக  ரூ.2,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு 2 மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2,000 பெற்றுச் செல்ல வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை மாவடட்டத்தில் கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக  ரூ.2,000 தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின்  தனி வட்டாட்சியர்(கு.பொ.),  புதுக்கோட்டை 9445000312,  தனி வட்டாட்சியா;(கு.பொ.), ஆலங்குடி 9445000313, வட்; வழங்கல் அலுவலா;,  குளத்தூh;  9445000314, வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வக்கோட்டை 9445000315,  வட்ட வழங்கல் அலுவலர் திருமயம், 9445000316.

 தனி வட்டாட்சியர்(கு.பொ.), அறந்தாங்கி 9445000317, வட்ட வழங்கல்  அலுவலர் ஆவுடையார்கோவில், 9445000318, வட்ட வழங்கல் அலுவலர் மணமேல்குடி 9443870034, 9445000320, வட்ட வழங்கல் அலுவலர் பொன்னமாரவதி  9445000404, வட்ட வழங்கல் அலுவலர் கறம்பக்குடி 9445000405, வட்ட வழங்கல் அலுவலர் இலுப்பூர் 9445000319, வட்ட  வழங்கல்  அலுவலர்  விராலிமலை 9080487553 -ஆகிய  செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Top