logo
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள்  ஆலோசனை

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் ஆலோசனை

11/Feb/2021 08:09:18

ஈரோடு, பிப்: ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி(பொலிவுறு நகரம்) உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

 ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை(11.2.2021) நடைபெற்ற  இந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள்  கே.வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு, நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் கே .எஸ்.தென்னரசு கூறியதாவது:ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது ரூ .30 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டது. அப்போது மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 14 கோடி மதிப்பிலான  ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 இதனையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைப்போன்று ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 1. 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 28 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. 

இந்த வாரம் முடிவதற்குள் 35 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து  முடிக்கப் பட்டு விடும். வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் அதிமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜன், தங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top