logo
கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை  பலி

கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி

08/Dec/2020 03:39:25

சென்னை , டிச: சென்னை திருவான்மியூர் கடலில் கடல் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியை செய்து கொண்டிருந்த 14 வயது மகள் கடலில் தவறி விழுந்து உயிருக்குப் போராடியபோது அவரைக் காப்பாற்ற கடலில் குதித்து நீந்திச் சென்ற அப்பாவை கடலலை இழுத்துச் சென்றது. மீனவர்கள் சிலர் படகில் சென்று மகளை காப்பாற்றி விட்டனர்.


பெசண்ட் நகர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(35). தரமணியில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மகள் ரேவதி(14). அவருக்கு கடலில் கடல் சறுக்கு விளையாட்டுப் பயிற்சி செய்வதில் ஆர்வம் இருந்ததாம். இதையடுத்து, பாலாஜி, தனது மகளை நேற்று அழைத்துச் சென்று   திருவான்மியூர் கடலில் கடல் சறுக்கு விளையாட்டுப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தாராம். 

அப்போது  எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து தத்தளித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகளைக் காப்பாற்ற கடலில் குதித்த பாலாஜியை  கடலலை இழுத்துச் சென்றது. இதைப்பார்த்த அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் படகில் விரைந்து சென்று ரேவதியை காப்பாற்றி விட்டனர். அலையில் இழுத்துச்செல்லப்பட்ட பாலாஜி சில மணி நேரத்தில் சடலமாக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தனர்.  இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Top