logo
100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

07/Feb/2021 04:47:46

ஈரோடு பிப்:  100 சதவீதகல்விக் கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்கும்  தனியார் தனியார் பள்ளிகள் குறித்து  பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  திட்டமிட்டபடி நாளை(பிப்.8)  9 மற்றும் 11 வகுப்புகள் தொடங்கப்பசடும். மீதமுள்ள வகுப்புகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம்(டி.என். பாளையம்) ஒன்றிய அதிமுக அலுவலகத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

 இந்தியாவில் பள்ளி கல்வித்துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதனை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் செய்ய முடியாது. திட்டமிட்டபடி திங்கள்கிழமை (நாளை) 9 மற்றும் 11  வகுப்புகள்  திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகள் திறப்பது குறித்து விரைவில் ஆலோசித்து  முடிவு எடுக்கப்படும்..

 100 சதவீதம் கட்டணத்தை செலுத்த  கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள்  குறித்து  பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 இவ்விழாவில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Top