logo
குறைந்தபட்ச ஓய்வூதியம்  ரூ.7850 வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

03/Feb/2021 03:38:47

புதுக்கோட்டை, பிப்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். எல்ஐசி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி எம்.ஏ.ரகுமான் தொடக்கவுரை யாற்றினார். மாநில செயலாளர் பி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.

கோரிக்கைகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும்.  முடக்கப்பட்ட 21 மாத கால நிலுவைத் தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துவகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இந்தக்  கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ம.வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் என்.ராமச்சந்திரன், கே.சதாசிவம், அ.மணவாளன், இரா.இராஜேந்திரசிங் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற மின் ஊழியர் சங்க நிர்வாகி பி.ஆவுடைமுத்து வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் இரா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


  


Top