logo
பிப்-6-இல்  விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூரில் கள் இறக்கும் அறப்போராட்டம்: தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லசாமி அறிவிப்பு.

பிப்-6-இல் விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூரில் கள் இறக்கும் அறப்போராட்டம்: தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லசாமி அறிவிப்பு.

02/Feb/2021 07:56:08

ஈரோடு.பிப்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள நரசிங்கனூரில் பிப்-6-ஆம் தேதி கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லசாமி  தெரிவித்தார்.

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு கள் இயக்கம் சங்கத்தின் தலைவர் நல்லசாமி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இந்திய  அரசியலமைப்பின் சட்டத்திற்கு கட்டுப்பட்டது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டமா, இல்லை மதுவிலக்குச் சட்டத்திற்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்கிற கேள்விக்கு தமிழக அரசிடம் சரியான பதில் இல்லை. 

உலகளாவிய நடைமுறைக்கு மாறாக தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தடை விதிக்கப்பட் டுள்ளது .மற்ற மாநிலங்களில் கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில்  தமிழகத்தில் மட்டுமே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 13-ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும். இந்த மாநாடு வரும் 2021 -ஆம் ஆண்டு தேர்தலை முன்னிறுத்தி நடத்தப்படும்.இந்த மாநாடு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும். வரும் 6 -ஆம்  தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நரசிங்கனூரில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடத்தப்படும்  எனவும் அவர் தெரிவித்தார்

Top