11/Jan/2021 08:47:06
ஈரோடு-ஜன:ஈரோடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பெண்கள் பொங்கல் வைத்து பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
ஈரோடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஆனைக்கல்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, பானை உடைத்தல், கோலாட்டம், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பஙகேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர். தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், வழக்குரைஞர் பிரிவு மாநில பொறுப்பாளர் பழனிச்சாமி ,மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சரஸ்வதி, பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன், விவேகானந்தன் பொருளாளர் தீபக் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.