logo
மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியனுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம்.

மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியனுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம்.

26/Feb/2021 09:02:46

புதுக்கோட்டை, பிப்:  கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் தா.
பாண்டியன்(88) உடல் நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு அகில இந்திய அளவில் பல தலைவர்களும், தமிழகத்தில் பல்வேறு
அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உள்பட பலவேறு கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்ற மௌன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய
பேருந்து நிலையத்தில் முடிவடைந்த ஊர்வலத்துக்குப்பின், அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

Top