08/Jun/2021 07:25:52
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மேலராஜ வீதியிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர்,
தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள்
நீர்,
திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு
அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர்
அலங்காரத்திலும் விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் அருள் பாலித்தார் . ஏற்பாடுகளை சிவ ஸ்ரீபாலாஸ்ரீகுருக்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.