logo
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி  ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு

08/Jan/2021 10:45:41

ஈரோடு, ஜன:வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதற்காக பா.ம.க.வினர் மேட்டூர் ரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர்

 மாநில துணைப் பொதுச் செயலாளர் தா. ப .பரமேஸ்வரன் தலைமையில் ஆணையாளர் மா.இளங்கோவனிடம் மனு கொடுக்கப்பட்டது. , மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எல். பரமசிவம்  முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலாளர்கள் பிரபு , ராசு மாநகரச் செயலாளர் ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பொ .வை .ஆறுமுகம், ராஜேந்திரன் ,அருள்மொழி,  வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள்,மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top