02/Jan/2021 10:53:47
ஈரோடு, ஜன: ஈரோட்டில் பாஜக மகளிரணியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கீதா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மகளிரணி மாநில பொதுசெயலாளர் மோகனப்பிரியா, மாநில துணை தலைவர் சபிதா போஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கு மகளிரணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், இந்த மாதம் இறுதியில் கோவை மண்டல மாநாடு குறித்தும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் புனிதம், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா மற்றும் நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.