26/Sep/2020 04:23:54
by s.senthikumar. புதுக்கோட்டை: மறைந்த பின்னணி பாடகர் எஸ.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க கலைஞர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி எஸ்பிபி-யின் பாடல்களை பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டையில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் நினைவேந்தல் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியனுக்கு முத்தமிழ் நாடக நடிகர் சங்க கலைஞர்கள் கண்ணீருடன் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் இதில், புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.