logo
தமிழக அரசை கண்டித்து வேளாளர் உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து வேளாளர் உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

02/Jan/2021 10:42:48

ஈரோடு, ஜன:  ஈரோட்டில் வேளாளர் உரிமை மீட்பு குழுவினரும், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் மாநில பொதுசெயலாளர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார். மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தார். இதில், வேளாளர் என்ற பெயரை வேற்று சமூகத்திற்கு வழங்க கூடாது எனவும், வேளாளர் பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய மகாஜன சங்கத்தினர், மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் பேரணியாக வந்து கலந்து கொண்டனர். அதேபோல், பல்வேறு சாதி சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ஈஸ்வரமூர்த்தி, சிவராஜ், பாலு, மத்திய மண்டல மாணவரணி செயலாளர் லோகு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top