17/Mar/2021 05:43:42
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் புதன்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் விராலிமலை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான தண்டாயுதபாணியிடம் வைப்பு தொகை செலுத்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பாளருக்கான உறுதிமொழியை வாசித்தார்.
வேட்பு மனுதாக்கல் நிகழ்வில் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.