logo
பொங்கல் பரிசாக ரூ .2500 வழங்கி முதல்வர் வரலாறு படைத்துள்ளார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்

பொங்கல் பரிசாக ரூ .2500 வழங்கி முதல்வர் வரலாறு படைத்துள்ளார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்

20/Dec/2020 08:16:54

ஈரோடு டிச : தமிழகத்தின் வரலாற்றில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கி முதல்வர் வரலாறு படைத்துள்ளார். முதல்வர் தலைமையில் இருக்கும் அரசை எந்த சக்தியாலும் 2021-இல் மாற்றியமைக்க முடியாது. மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவரே அறியணையில் அமர்வார் என்றார்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் நடைபெற்றதையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

 பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடுசெய்யவேண்டும் என இந்தியாவில் முதன்முதல் குரல்கொடுத்தவர் ஜெயலலிதா. தமிழகமுதல்வர் வரும் பொங்கல் திருநாளுக்குரூ.2500 வழங்கஆணைபிரப்பித்துள்ளார். அத்துடன் சர்க்கரை அரிசி,கரும்பு உள்ளிட்டபொருட்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைப்பார்த்து திமுக வியந்து போய்யுள்ளது. என்ன கொடுக்கப் போகிறார்கள் என்று கேட்டார்கள் அள்ளித் தருவேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீட் தேர்வே இருக்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. இருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்விற்கு பயிற்சி பெற்ற நமது மாணவர்கள் 313 பேர்கள் மருத்துவர்களாகவும் பல்மருத்துவர்களாக 102 பேரும் என 415 பேர்களுக்கு மருத்துவபடிப்பிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 வெள்ளை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் நாளை கடைசி என்பதால் அனைவரும் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். அதனைமாற்றினால் தான் பொங்கல் பரிசு இலவசங்கள் கிடைக்கும் வெள்ளை குடும்பஅட்டை வைத்திருந்தால் இலவசங்கள் வழங்கக்கூடாது என்றுநீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது. வேலைவாய்ப்பு இல்லைஎன்ற நிலை இனி தமிழகத்தில் இருக்காது.

தமிழகம் அமைதியானமாநிலம் மின் வெட்டே இல்லாதமாநிலம் அனைத்து கட்டமைப்புகள் கொண்டமாநிலம் என்ற அடிப்படையில் அனைத்து  முதலீட்டாளர்களும் தமிழகத்திற்கு வந்து இறங்கியுள்ளனர். இன்னும் 6 மாதகாலத்திற்குபிறகு 5 லட்சம் நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற வரலாறு உருவாக்கப்படும். முதல்வரின் தொலைநோக்கு சிந்தனை அவ்வாறு உள்ளது. இதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனபேசினார். 

அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழகத்தின் வரலாற்றில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கி முதல்வர் வராலறு படைத்துள்ளார். கிராமந்தோறும் 2000 மினிகிளினிக் உருவாக்கி வரலாறு படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொருந்தவரையிலும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசை எந்த சக்தியாலும் 2021-இல் மாற்றியமைக்க முடியாது மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர்தான் அறியணையில் அமர்வார் எனதெரிவித்தார்.

Top