logo
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

26/Dec/2020 07:09:14

ஈரோடு, டிச:  ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள டெலிபோன் பவன் அலுவலகம் அருகில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க மாவட்ட துணைத் தலைவர் தம்பிக்கலையான் தலைமை வகித்தார். இதில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், மின்திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  


Top