logo
ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் துணை ராணுவத்தினர், போலீஸார் கொடி அணிவகுப்பு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் துணை ராணுவத்தினர், போலீஸார் கொடி அணிவகுப்பு

15/Mar/2021 05:11:21

ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு  நடத்தப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் அமைதியான முறையில் நடக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில்  மக்கள் வாக்களிக்கும் வசதியாக 2,741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 192 வாக்குச்சாவடி மையங்கள்  பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

தேர்தல் பாதுகாப்புப்பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்கு 92 துணை இராணுவத்தினர்  வந்துள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவின்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாக சென்று தேர்தலை அமைதியாக நடத்தும் வகையிலும்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  வகையிலும்  துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

  அதன்படி, ஈரோடு  பிபி அக்ரஹாரம் பகுதியில் உள்ள கருங்கல்பாளையம் காவல் நிலைய போலீஸார்  மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  கனகேஸ்வரி, நகர்  துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு ஆகியோர்  கலந்து கொண்டுகொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர்.

 இதில் ஆய்வாளர்கள்  கோபிநாத், ரவிக்குமார், ஜெயமுருகன், பாலமுருகன் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர். கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு பெரிய அக்ரஹாரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் வரை சென்று மீண்டும் பவானிரோடு வழியாக அசோகபுரம், பார்க் ரோடு, திருநகர் காலனி வரை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Top