logo
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீஸார் சோதனை

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீஸார் சோதனை

05/Mar/2021 06:25:22

ஈரோடு மார்ச்: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்  ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.

ரயில்களில் பணம், மது, பரிசு பொருட்கள், வாக்காளர்களுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் நோக்கில்  ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது,

ஈரோடு வழியே சென்று வரும் ரயில்களுக்கு உள்ளே ரயில்வே ரோந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  ஈரோடு ரயில் நிலைய வாயிலருகே  எஸ்.ஐ. தலைமையில் முகாமிட்டிருந்த ரயில்வே போலீஸார்  பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

பணம், மது, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்கிற கோணத்தில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் முன்பதிவு டிக்கெட், அதற்கான அடையாள அட்டை போன்றவற்றையும் ரயில்வே போலீஸார் வாங்கி சரிபார்த்தனர்.  வெளியூரில் இருந்து ரயிலில் வந்து ஈரோடுக்குள் நுழையும் பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. 

Top