logo
பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன்  ஆலோசனைக்குபின்  அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசனைக்குபின் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

25/Dec/2020 10:30:58

ஈரோடு-டிச: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆசிரியர் நகர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள்  பயன்பாட்டிற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைக்கு பிறகே அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. கொரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கபட்டது. அப்போது உள்ள நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு. தமிழகத்தில் 11- புதிய மருத்துவ கல்லூரி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால் 7.5 இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். 

 முன்னதாக, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து ரூ 9. கோடியே 47- லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளுக்கான பூமி  பூஜை, புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் பூமி பூஜை, பயனாளிகளுக்கு மாடு, ஆடு வளர்க்க கொட்டகை அமைக்க ஆணை வழங்குதல் உள்ளிட்ட  வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.


Top