30/Nov/2020 11:17:56
ஈரோடு: ஈரோடு பெரியார் நகர் கொளத்துபனை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(32). கூலி தொழிலாளி. இவர் திங்கள்கிழமை தனது நண்பருடன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார்.
பஸ் ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் உள்ள வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, ஒரு மர்மநபர் மணிகண்டனின் மேல்பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி, அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார். பின்னர், 2 மர்மநபர்களும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கூச்சல்போட, அக்கம்பக்கத்தினர் அந்த மர்மநபர்களை மடக்கி பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த நபர்கள் பவானி மேற்கு தெருவை சேர்ந்த பழனி(32), தர்மபுரி மாவட்டம, எடைப்பட்டி பென்னாகரத்தை சேர்ந்த முருகேஷ்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்