09/May/2021 04:43:26
புதுக்கோட்டை, மே: பொது முடக்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து பொது மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தலைவர் கலைஞர் ஆசியுடன் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன் திமுக கழகத்தின் சார்பாக போட்டியிட்ட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த என் உயிரினும் மேலான தொகுதி மக்களாகிய உங்களை உங்கள் இல்லம் தேடி நேரில் வந்து நன்றி சொல்ல சிறிது தாமதம் ஆகும் நிலை கொரோனா பொதுமுடக்கத்தால் உருவாகியுள்ளது.
ஆகவே எனது தொகுதி மக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் எனது முகநூல் மற்றும் ஊடகங்கள், இணைய செய்தி நிறுவனங்கள் வாயிலாக எனது நன்றியினை முதன் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் தொகுதி மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன்.
தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவி
தேவை என்றால் உடனடியாக என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். கொரனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்
பட்டவுடன் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முழுவதும் மக்களை
சந்தித்து நன்றி கூற காத்திருக்கிறேன் .
உங்களால் நான் உங்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்துடன் உங்கள் ஆசியுடன் எனது சட்டமன்ற பணியை தொடங்குகிறேன் என்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.