24/Dec/2020 01:49:48
மதுரை- டிச: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திடீர் நகர் மேலவாசல் இப்பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(38). இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கழிப்பிடத்திற்கு சென்றபோது பைக்கில் சென்ற 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்திமுனையில் வழிமறித்து அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் திடீர் நகர் போலீசில் அளித்த புகாரின பேரில் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.