06/Jun/2021 10:41:08
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு இளைஞர் நற்பணி மன்றங்கள் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை நியூ கோல்டன் நகர் திருவள்ளுவர் நகர் சிராஜ் நகர் ஒற்றுமை இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் புதுக்கோட்டை நகரில் ல் ஊரடங்கு காலங்களில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.