logo
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

21/Dec/2020 05:35:27

ஈரோடு, டிச:  சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட தலைவர் லலிதா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மத்திய குழு அமிர்தம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை கொடுக்க வேண்டியும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க வலியுறுத்தியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒரு கேஸ் சிலிண்டரை பாடையில் வைத்து அதற்கு மாலையிட்டு தாரை தப்பட்டை உடன் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் பிரசன்னா, துணைச் செயலாளர் கோமதி உள்பட ஏராளமான  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


Top