logo
 திமுக வுடன் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் கூட்டணி அமைக்கும்:  நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தகவல்

திமுக வுடன் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் கூட்டணி அமைக்கும்: நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தகவல்

20/Dec/2020 11:09:32

ஈரோடு, டிச: வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக வுடன் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் கூட்டணி அமைக்கும் என்றார் அக்கட்சியின்  நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா.


 ஈரோட்டிலுள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுக படுத்தியதோடு கொரானா காலத்திலும் கொடூரமாக செயல்படும் கந்து வட்டி கும்பலை சாமானிய மக்கள் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் திமுக வுடன் கூட்டணி அமைக்கும் எனறும் திமுகவுடன் சேர்ந்த களப்பணியாற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை அரியணையில் ஏற்றவோம் என்றும் தெரிவித்த அவர் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் சார்பில் தளபதியை அமரவைப்போம் தமிழகத்தை வாழப்போம் என்ற  ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளதாகவும்   தெரிவித்தார். 


Top