04/Mar/2021 08:39:32
புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,
ஆட்சியருமான பி.உமாமகேஸ்வரி வியாழக்கிழமை ஆய்வு
மேற்கொண்டார்.
ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவை நடத்தும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், தற்பொழுது வரை 125 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களான கலிப்புல்லாநகர், பூவரசகுடி, கைக்குறிச்சி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதே போன்று வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு கருவியினை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்து ஆலங்குடி பேருந்து நிலையத்தில் மாதிரி செயல்விளக்கம் பொதுமக்கள் தொpந்து கொள்ளும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த
ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர் பொன்மலர், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.