logo

ஈரோட்டில் தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம்

07/Feb/2021 11:19:19

ஈரோடு, பிப்: ஈரோட்டில் தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் எஸ்பி., நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசார்களை பணியிடம் மாற்றி, அவர்களுக்கு பதிலாக புதிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றி வரும் செந்தில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சட்டம் ஒழுங்கு பணிக்கும், ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் ஆறுமுகம், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு போலீசாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றிய பழனிச்சாமி, ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் சட்டம் ஒழுங்கு பணிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

 கருங்கல்பாளையம் தனிப்பிரிவு போலீசாக, அதே ஸ்டேஷனில் பணியாற்றி வரும் வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு தாலுகா தனிப்பிரிவில் பணியாற்றி வந்த உதய சூரியன், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் சுரேஷ், ஈரோடு தாலுகா ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். 

ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு போலீசாக ஈரோடு ஜி.ஹெச் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் ஜனார்தனன், ஈரோடு ஜி.ஹெச் போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் செல்வசுந்தரம், அதே ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கு அதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் வேல்முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற தனிப்பிரிவு போலீசாருக்கு அவர்களது பணி குறித்து நேற்று தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் விளக்கி கூறினார்.

Top