logo
விழுப்புரத்திலிருந்து செவ்வாடை பக்தர்கள் 500 பேர் இருமுடி ஏந்தி மேல்மருவத்தூரில் சாமி தரிசனம்

விழுப்புரத்திலிருந்து செவ்வாடை பக்தர்கள் 500 பேர் இருமுடி ஏந்தி மேல்மருவத்தூரில் சாமி தரிசனம்

20/Dec/2020 09:06:50

விழுப்புரம், டிச: விழுப்புரத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் 500 பேர் இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு பயணம் செய்து அம்மனை தரிசித்தனர்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இந்த சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் கடந்த 11-ந் தேதி முதல் செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி 7 நாட்கள் விரதம் இருந்தனர்.

இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக விழுப்புரம் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் 500 பேர் பஸ், வேன்கள் மூலம் மேல்மருவத்தூருக்கு புறப்பட்டனர். முன்னதாக விழுப்புரம் சக்தி பீடத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டியும், தொழில்வளம், வியாபாரம், விவசாயம் செழிக்கவும், கொரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் விழுப்புரம் –கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தலைவர் ஆர்.ஜெயபாலன் தலைமையில் செவ்வாடை பக்தர்கள், இருமுடி ஏந்தியும், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியபடியும் விழுப்புரத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு புறப்பட்டு அங்குள்ள ஆதிபராசக்தி கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, இணை செயலாளர்கள் திரிபுரசுந்தரி, சண்முகம், வசுந்தராதேவி, மணிவாசகம், காளிதாஸ், வட்ட தலைவர்கள் மகாலிங்கம், மணிகண்டன், மோகனகிருஷ்ணன், பழனி, தர்மலிங்கம், பார்த்தசாரதி, முனுசாமி, தனசேகரன், சாந்திசுந்தர்ராஜன், பாலகுரு, சிகாமணி, பாலகண்ணன்.

சக்திபீட பொறுப்பாளர்கள் சீத்தாராமன், பாண்டுரங்கன், சண்முகம், மாரிமுத்து, பாவாடைராயன், மணி, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாட்டினையும் மாவட்ட தலைவர் ஜெயபாலன் செய்திருந்தார். தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி வரை செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி விரதமிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்லவும் விழுப்புரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Top