logo
பவானி, காளிங்கராயன் பாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு

பவானி, காளிங்கராயன் பாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு

20/Dec/2020 07:48:14

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்கராயன் பாளையம் பகுதியில் வியாழக்கிழமை அன்று அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.வி. இராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு  அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தனர். பின்னர் எம்எல்ஏக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

 இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. இராமலிங்கம் பேசுகையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது இப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களாகிய தாங்கள் என்னிடத்தில் வைத்த இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது அதேபோல் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக அரசிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் எனவும், இந்த மினி கிளினிக் ஆனது ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணியில் இருப்பார்கள். முதலுதவி சிகிச்சை, ஈசிஜி, நாய் கடி உட்பட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். 


Top